சென்னை ஆவடியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலரை கட்டி வைத்து அடித்த பொது மக்கள்

0 471

சென்னை ஆவடியில் மளிகைக் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவது போல் நடித்து கடைக்கார பெண்ணின் கழுத்தில் இருந்த 15 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றதாகக் கூறி சிறப்பு காவல் படை காவலர் ஒருவரை பொது மக்கள் விரட்டி பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர்.

பின்னர் அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் அவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலரான பொக்கர் என்பது தெரிய வந்ததாகவும், 15 நாட்கள் விடுப்பில் சென்னை வந்த போது செயின் பறிப்பில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments