விரைவாக நிரம்பி வரும் கர்நாடக அணைகள்... காவிரியில் தண்ணீர் திறந்து விட டாக்டர்.ராமதாஸ் வலியுறுத்தல்

0 336

கர்நாடக அணைகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டுமென பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளிலும் மொத்தக் கொள்ளளவில் 52 சதவீதத்திற்கு அதிகமாக தண்ணீர் உள்ளதாக கூறியுள்ளார்.

எனவே, காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்புகளின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தான் நியாயம் ஆகும் என தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments