தெலங்கானாவில் சாலையை கடக்க முயன்றவர் மீது அதிவேகமாக வந்து மோதிய பைக்

0 471

தெலங்கானா மாநிலம் கஜ்வெல் நகரில் சாலையை கடக்க முயன்றவர் மீது அதிவேகமாக வந்த பைக் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

திரிநாத் மற்றும் ஷ்ரவன் குமார் என்ற இளைஞர்கள் தலைக்கவசம் அணியாமல் பைக்கில் வேகமாக சென்றபோது சாலையை கடக்க முயன்ற கனகய்யா என்பவர் மீது மோதியுள்ளனர்.

இதில் கனகய்யா மற்றும் பைக்கை ஓட்டி வந்த திரிநாத் லேசான காயமடைந்த நிலையில் பைக்கின் பின்னால் அமர்ந்து வந்த ஷ்ரவன் குமார் டிவைடர் மீது தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments