கர்நாடகாவில் வெப் சீரிஸ் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த 6 பேர் கும்பல் கைது

0 406

பார்சி ஹிந்தி வெப் சீரிஸ் பார்த்து 100 ரூபாய், 500 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்த ஆறு நபர்கள் கொண்ட கும்பலை கர்நாடக மாநிலம் பெலகாவியில் போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்காலி மாவட்டம் முதலகி தாலுகா அரபாவி கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, இரவு நேரத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்தது தெரியவந்தது.

இந்தக் கும்பலிடம் இருந்து சுமார் 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள், நவீன பிரிண்டர் மற்றும் உபகரணங்கள், 6 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்துள்ளதாக போலீசார் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments