செல்போன் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம்... சிசிடிவி காட்சிகளை வைத்து 2 இளைஞர்களை கைது

0 279

கடந்த 30 ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து 15-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் 70 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவத்தில் 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

அதிகாலையில் பைக்கில் வந்த இருவர் சுரேந்தர் என்பருக்கு சொந்தமான 'க்ரிஷி செல் சிட்டி' என்ற கடையின் பூட்டை இரும்பு ராடால்  உடைத்து கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.

சிசிடிவி காட்சிகளை வைத்து ஜாம் பஜாரை சேர்ந்த கரிமுல்லா மற்றும் மாட்டங்குப்பத்தை சேர்ந்த பிரசாத் என்கிற மதனை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments