காது கேளாதோருக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று சென்னை திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

0 936

இங்கிலாந்தில் நடைபெற்ற காது கேளாதோருக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்ற இந்திய அணியில் விளையாடி தமிழக வீரர்கள் சாய் ஆகாஷ் மற்றும் சுதர்சனுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த 18ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த 7 போட்டிகளில் ஐந்தில் இந்திய அணி வென்ற நிலையில், துணைக் கேப்டன் சாய் ஆகாஷ் தொடர் நாயகன் விருதை பெற்றுள்ளார்.

இருவருக்கும் அரசுத்துறையில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், தமிழ்நாட்டில் காது கேளாதோருக்கான கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும் எனவும் அவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments