தீப்பெட்டி தொழிற்சாலை தொழிலாளி தற்கொலைக்கு தூண்டியதாக கிராம பஞ்சாயத்து தலைவர் உள்பட 3 பேர் கைது

0 227

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தீப்பெட்டி ஆலையில் வேலை செய்த இளைஞரை தற்கொலைக்கு தூண்டியதாக மேட்டமலை கிராம பஞ்சாயத்து தலைவர் பார்த்தசாரதி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தன்னுடைய தீப்பெட்டி ஆலையில் வேலை செய்த அழகுராஜ் உள்ளிட்ட 4 பேர் தீக்குச்சி மூட்டைகளை திருடி விற்றதாக பார்த்தசாரதியும் அவரை சார்ந்தவர்களும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 20 நாட்களாக அழகுராஜ் வேறு இடத்தில் வேலைக்கு சென்றதையடுத்து, தன்னிடம் வாங்கிய முன்பணம் உள்பட ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை தருமாறு பார்த்தசாரதி வற்புறுத்தியதால், அழகுராஜா பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதன்பிறகும் தொடர்ந்து தொந்தரவு செய்ததால், அழகுராஜா பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், பார்த்தசாரதி உள்ளிட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments