பெங்களூருவில் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் செக்யூரிட்டியை கத்தியால் குத்திய மாணவன்

0 464

பெங்களூரு, அம்ருதஹள்ளி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சிக்கு மது குடித்துவிட்டு வந்த மாணவனை தடுக்க முயன்ற காவலாளியை மாணவன் கத்தியால் குத்தியது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 

பி.ஏ படிக்கும் பார்கவ் என்ற மாணவன் குடித்துவிட்டு கல்லூரிக்குள் நுழைய முயன்றபோது செக்யூரிட்டியாக பணிபுரிந்த பீகாரை சேர்ந்த ஜெய் கிஷோர் ராய் என்பவர் மாணவனை தடுத்ததால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த மாணவன் கத்தியால் செக்யூரிட்டியின் மார்பில் குத்தியதையடுத்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த நிலையில் மாணவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments