விழுப்புரம் அருகே சாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு

0 262

விழுப்புரம் அருகே சாராயம் குடித்ததால் உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேரில் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

டி குமாரமங்கலத்தை சேர்ந்த ஜெயராமன், முருகன் மற்றும் சிவச்சந்திரன் ஆகியோர் கடந்த சனிக்கிழமை சாராயம் குடித்த பிறகு வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டதால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஜெயராமன் வெள்ளிக்கிழமையிலிருந்தே சாராயம் குடித்ததாக கூறப்படும் நிலையில், சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். புதுச்சேரியிலிருந்து சாராயத்தை கடத்தி வந்ததாக முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments