குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது குறித்து ஆய்வு செய்ய பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு

0 280

குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதையும் சுத்தரிக்கப்படாமல் குடிநீர் விநியோகிப்பதையும் ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட சுகாதார தொழில்நுட்ப கண்காணிப்பாளர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக செல்வவிநாயகம் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

இதில் மழைக்கால நோய் தொற்றுக்களை தடுத்தல், மருத்துவ முகாமை அமைத்து தொற்று பரவலை கட்டுப்படுத்துதல், குடிநீர் தரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments