குடும்பப் பிரச்சினையால் 7 வயது மகனுடன் செல்போன் கோபுரத்தில் ஏறிய குடிமகன்

0 401

திருத்தணி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக மதுபோதையில் செல்போன் டவர் மீது 7 வயது மகனுடன் ஏறிய முருகன் என்பவர் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்டார்.

போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் முருகனை கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் மாலை 6:00 மணிக்கு டவர் மீது ஏறிய முருகன் நள்ளிரவு ஒரு மணி வரை கீழே இறங்காமல் போலீசருக்கு தண்ணி காட்டி வந்தார் முதலில் பாதுகாப்பாக குழந்தையை மீட்ட போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பின்னர் முருகனையும் மீட்டனர் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments