டூவீலரில் சென்ற செவிலியரிடம் 6 சவரன் நகை பறிப்பு சென்னையில் காவல் நிலையம் அருகில் துணிகர வழிப்பறி...

0 380

சென்னையில் பெரியமேடு காவல் நிலையம் அருகே மொபட்டில் சென்றுக் கொண்டிருந்த செவிலியர் அணிந்திருந்த 6 சவரன் தங்க நகையை மற்றொரு டூவீலரில் வந்த நபர் பறித்துச் சென்றார்.

எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மாதவரத்தைச் சேர்ந்த ரேணுகா மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது தலையில் ஹெல்மெட் அணிந்து Dio வாகனத்தில் பின்னால் வந்தவர் நகையை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

சிறிது தூரத்திற்கு அவரை விரட்டிச் சென்றும் பிடிக்க முடியாததால் காவல் நிலையத்தில் ரேணுகா புகாரளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments