பிரபல ரவுடி ராஜா நடுரோட்டில் வெட்டிக்கொலை.. பைக்கை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓட்டம்..

0 385

வேலூர் அருகே பிரபல ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியூரைச் சேர்ந்த ராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்தொடர்ந்து காரில் வந்த மர்மகும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் மடக்கி சரமாரியாக ராஜாவை வெட்டியது.

இதில் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலை செய்யப்பட்ட ராஜா மீது 5 கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் காவல் துறையினருடன் சென்று சில இடங்களில் அதிரடியாக ஆய்வு செய்து கொலையில் தொடர்புடைய 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments