17 வயது சிறுமியுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞர் வெட்டிக் கொலை…

0 430

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடியில், போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த இளைஞர் மாமன் மகளைப் பார்க்கச் சென்ற போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த பேச்சியம்மாளின் மகனான விக்டர், தனது தாய்மாமன் மகளான 17 வயது சிறுமியுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

சிறுமியை அழைத்துச் சென்றது தொடர்பாக கடந்தாண்டு விக்டர் கைது செய்யப்பட்டு 3 மாதங்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், தனது மகளுடன் விக்டர் பேசிக் கொண்டிருந்ததைக் கண்ட சிறுமியின் தந்தை காசி, சகோதரன் தங்கசெல்வன் ஆகியோர் சேர்ந்து கொலை செய்ததாகவும் இருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments