தமிழக அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை... ஆல் இந்தியா பர்மிட் மூலம் பேருந்துகளை தமிழகத்தில் இயக்க அனுமதி

0 450

வெளிமாநிலப் பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை ஆல் இந்தியா பர்மிட்டுடன் தமிழகத்தில் இயக்கத் தடை இல்லை என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, தமிழகத்திற்குள் இயக்கப்படாமல், தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை இயக்கத் தடை விதித்த தமிழக அரசு, நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளை சிறைப்பிடித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பேருந்து உரிமையாளர்கள் வழக்குத் தொடுத்திருந்தனர்.

அதேநேரம், வெளிமாநில பதிவெண் பேருந்துகள் தமிழகத்துக்குள் இயக்கப்படவில்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments