பெரம்பலூரில் ரூ.20,000 லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்ட துணை வட்டாட்சியர் சிறையில் அடைப்பு

0 356

பெரம்பலூரில் புதிதாக கட்டப்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடையில்லா சான்று வழங்குவதற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கிய துணை வட்டாட்சியர் பழனியப்பன், தனக்கு நெஞ்சு வலி எனக்கூறியதால் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவமனையிலிருந்து இன்று காலை அவர் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. பழனியப்பனை வலைவீசி தேடி வரும் லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ நல்லுசாமியை சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments