சுங்கத்துறை ஆய்வாளர் வங்கியில் செலுத்திய பணத்தில் கள்ள நோட்டு? போலீசார் அதிரடி விசாரணை

0 366
சுங்கத்துறை ஆய்வாளர் வங்கியில் செலுத்திய பணத்தில் கள்ள நோட்டு? போலீசார் அதிரடி விசாரணை

சென்னை அண்ணா நகரில் சுங்கத்துறை அதிகாரி ஒருவர் வங்கியில் செலுத்திய பணத்தில் 6 கள்ள நோட்டுகள் இருந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜஸ்தானைச் சேர்ந்த புஷ்பேந்திரா, பாரிமுனையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். ராஜஸ்தானில் வசித்துவரும் தமது மனைவியின் ஹெச்.டி.எஃப்.சி வங்கி கணக்கில் வரவு வைப்பதற்காக அவர் அண்ணா நகர் கிளையில் 5 லட்ச ரூபாய் செலுத்திய போது அதில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் ஆறு இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புஷ்பேந்திராவிடம் போலீசார் விசாரித்தபோது தந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக நண்பர்களிடம் இருந்து கடன் வாங்கிய பணத்தை வங்கியில் செலுத்தியதாக கூறியுள்ளார். அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments