சென்னையில் பைக் ரிப்பேர் தொழிலில் வருமானம் குறைந்ததால் உதிரி பாகங்களை திருடி விற்ற மெக்கானிக்

0 382

சென்னையை அடுத்த புழல் மற்றும் சுற்றுவட்டாரத்தில்  இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை நடத்தி வந்த முருகன் என்பவர், தொழிலில் வருமானம் குறைந்ததால்  இருசக்கர வாகனங்களை திருடி, அதன் உதிரி பாகங்களை கழட்டி பழைய இரும்பு கடையில் விற்று வந்ததை கண்டுபிடித்து கைது செய்ததாக போலீசார் கூறினர். 

அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், இருசக்கர வாகனத்தின் 15 இஞ்சின், 16 இருசக்கர வாகனங்களின் சேஸ்களை பறிமுதல் செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இஞ்சின்களை விற்றால் காவல் துறையில் சிக்கி கொள்வோம் என்ற  எண்ணத்தில், வீட்டில் பதுக்கி வைத்தக வாக்கு மூலம் அளித்த மெக்கானிக் முருகனை, புழல் போலீசார் நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments