ஈரோடு அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்களே செவிலியர்களாக பணிகளில் ஈடுபாடு ?

0 305

ஈரோடு அரசு தலைமை மருத்துவனையில் பணிபுரியம் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் செவிலியர்களாக மாறி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இங்குள்ள பல்நோக்கு உயர் சிறப்பு சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையால், உரிய சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் சிரமப்படுவதால், தூய்மை பணியாளர்களே நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோவை பார்த்த சுகாதாரத்துறை இணை இயக்குனர் அம்பிகா சண்முகம், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments