திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் திருட்டு: 2 பெண்கள் கைது

0 480

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது திருட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பெண் ஊழியர்கள் 2 பேரிடமிருந்து ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

பணத்தை எடுத்து சேலையில் மறைத்துக் கொள்வதை கண்காணிப்பு கேமரா மூலமாக கண்காணித்த அதிகாரிகள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். பணத்துடன் கழிவறைக்குச் சென்ற பெண்கள் இருவரும் தங்களது உள்ளாடைகளில் அதனை மறைத்து வைத்துக் கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments