சவுக்கு சங்கருக்கு எதிரான போராட்டம் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

0 453

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிராக துடைப்பங்களுடன் பெண்கள் போராட்டம் நடத்திய விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது உரிய அனுமதியின்றி  போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மேலும் பெண்களை அழைத்து வந்த அமைப்பு எது என்பது குறித்தும் விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments