பம்பு செட்டு அருகே இருந்த ஓட்டு வீட்டில் வெடி விபத்து.. வெடிபொருட்களை சேகரித்து வைத்திருந்த இளைஞர் கைது...

0 317

சிவகங்கை அருகே அரசனேரி கிராமத்தில், வயல்வெளியில் இருந்த ஓட்டுவீட்டில் வெடிகுண்டு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

தடயவியல் நிபுணர்களுடன் போலீசார் நடத்திய சோதனையில், மூலப்பொருட்களில் கடும் வெப்பத்தால் உராய்வு ஏற்பட்டு வெடித்தது தெரியவந்தது.

2 கொலை மற்றும் 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய அரவிந்தன் என்பவர் வெடிப்பொருட்களை வைத்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு தயாரித்து முக்கிய நபர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டினாரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments