குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் பாதியில் நின்ற லிஃப்ட்... உள்ளே சிக்கிய முதியவரை மீட்கும் போது தவறி விழுந்து உயிரிழப்பு....

0 382

சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் பாதியில் நின்ற லிஃப்டுக்குள் சிக்கிய முதியவரை மீட்கும் போது தவறி விழுந்து உயிரிழந்தார்.

அந்த குடியிருப்பின்10 வது மாடியில் வசித்து வந்த கணேசன்என்பவர், நேற்று மாலை லிஃப்டில் சென்றபோது 6வது மாடிக்கும் 7வது மாடிக்கும் இடையே லிப்ட் திடிரென நின்றுள்ளது.

நீண்ட நேரத்திற்கு பிறகு கணேசனின் கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் லிப்ட் ஆபரேட்டருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, தற்காலிக ஊழியர் ஒருவர் 6ஆவது மாடிக்கு வந்து பாதியில் நின்ற லிப்ட் கதவை திறந்து விட்டுள்ளார்.

அப்போது லிப்ட்டில் இருந்து குதிக்க முயன்றபோது பதற்றத்தில் கால்தவறி லிப்ட் செல்லும் பாதையில் விழுந்து கணேசன் உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments