முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய மதுவிலக்கு சட்டத்தில் திருத்த மசோதா சிறந்த நகைச்சுவை: அண்ணாமலை

0 486

தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் தண்டனைகள் கடுமையாக இல்லை என்று திருத்த மசோதா கொண்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த ஆண்டு, 23 பேர் பலியாகக் காரணமாக இருந்த கள்ளச்சாராய வியாபாரிக்கு நெருக்கமான அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் 65 பேர் பலியான பின்பும், மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமியைப் பதவி நீக்கம் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாஃபர் சாதிக்குக்கு, திமுகவில் உயர் பதவி கொடுத்து, 2 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்கும் வரை வேடிக்கை பார்த்ததாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments