தேடப்பட்டு வந்த ரவுடி சீர்காழி சத்யா தப்பியோட முயன்றபோது துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாக போலீசார் தகவல்

0 498

6 கொலை வழக்குகள் உள்பட பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த ரவுடி சத்யாவை சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மாமல்லபுரம் பகுதிக்கு சத்யா வந்திருப்பதையறிந்து போலீசார் அவரை பின்தொடர்ந்த போது பழவேலி மலைப்பகுதியில் தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது. தன்னை பிடிக்க முயன்ற ரஞ்சித்குமார் என்பவரை  சத்யா அரிவாளால் வெட்டியதால் துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments