டெல்லியில் தொடர் கனமழை... குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0 466

டெல்லியில் பெய்துவரும் தொடர் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான இடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது

தண்ணீர் தேங்கியுள்ள சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. ஆங்காங்கே வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

இரவு முதலே கனமழை பெய்து வருவதால், டெல்லி விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. முதலாவது டெர்மினலில் காலை 5 மணிக்கு மேற்கூரை இடிந்து விழுந்ததில், 6 பேர் காயமடைந்தனர். மீட்புக் குழுவினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பாதுகாப்புக் காரணங்களாக முதலாவது டெர்மினல் மூடப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இண்டிகோ நிறுவனம் மழை காரணமாக விமானசேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments