வண்டியூர் டோல்கேட்டில் 15 நாட்களுக்கு முன்பு கடந்த வாகனங்களுக்கு தற்போது டோல் கட்டணம்

0 322

மதுரை வண்டியூர் டோல்கேட்டில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 15 நாட்களுக்கு முன்பு கடந்துச் சென்ற வாகனங்களுக்கு தற்போது பாஸ்ட் டிராக் உள்ளிட்ட செயலிகளிலிருந்து பணம் பிடிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

தங்களது வாகனம் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் டோல்கேட்டை வாகனம் தற்போது கடந்ததாகக் கூறி வங்கியிலிருந்து பணம் எடுக்கப்பட்ட குறுந்தகவல் வந்திருப்பதாக ஏராளமானவர்கள் அந்த டோல்கேட் நிர்வாகத்தினரிடம் முறையிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments