கென்யாவில் புதிய வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்... இந்தியர்கள் கவனமுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

0 419


கென்யாவில் புதிய வரிகளை அரசு அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்துள்ளன. கலவரங்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

புதிய வரி மசோதாவிற்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றபோது நாடாளுமன்ற வளாகத்துக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் அத்துமீறி நுழைந்தனர்.

அவர்களிடமிருந்து தப்பிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரங்கப்பாதை வழியாக வெளியேறினர். கென்யாவில் வசித்துவரும் இந்தியர்கள் அவசியமின்றி வெளியே நடமாட வேண்டாம் என அந்நாட்டுக்கான இந்திய தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments