சபாநாயகரை கண்டித்து பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு... இட ஒதுக்கீடை கிடப்பில் போட தமிழக அரசு முயற்சி என்றும் புகார்

0 353

இட ஒதுக்கீடு வழங்காமல் காலம் தாழ்த்தவே சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தமிழக அரசு சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து அமைச்சர் சிவசங்கர் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்க சபாநாயகர் அனுமதிக்காததை கண்டித்து அவர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் , மாநில சுயாட்சி பேசும் தமிழக அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வாய்ப்பு இருந்தும் ஏன் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினர். 

சட்டமன்றத்தில் சபாநாயகர் சர்வதிகாரி போன்று செயல்படுவதாகவும் பாமக உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments