பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்பாடுகள் தீவிரம்... 200 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர் வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்பு

0 304

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் மைதானங்களின் கட்டுமானம் மற்றும் சீரமைப்புப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இரு நூறு நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 500 வீரர் வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கும் வகையில் 35 மைதானங்கள் தயாராகியுள்ளன.

பல்வேறு நாடுகளை சேர்ந்த  20 ஆயிரம் பத்திரிகையாளர்களும், 45 ஆயிரம் தன்னார்வலர்களும் வருகை தரவுள்ளதால் தங்குமிடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. போட்டி தொடக்கவிழா நடைபெறும் ஈஃபிள் கோபுரம் அமைந்துள்ள பகுதியில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments