18 வயது நிரம்பாதவர்கள் ஓட்டிச் சென்ற 5 டூவீலர்கள் பறிமுதல் செய்த போலீஸ்...

0 355

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியில் வாகன தணிக்கை நடத்திய திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர்கள், சிறார்கள் ஓட்டிச் சென்ற 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

அந்த சிறார்களின் பெற்றோருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று வருட சிறை தண்டனை, அந்த சிறார் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தகுதி நீக்கம், வாகனத்தின் பதிவுச் சான்று ஓராண்டுக்கு ரத்து ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதால் பெற்றோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments