திருச்சியில் கல்லூரி மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை

0 552

திருச்சி சமயபுரத்தில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு பொறியியல் படிப்பு படித்துவந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி கல்லூரி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மகளின் இறப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தாரணியின் தந்தை பாலாஜி, மகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்  சொந்த ஊருக்கு செல்ல விடுமுறை தருமாறு கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டதாகவும் ஆனால் நிர்வாகத்தினர் விடுப்பு தர மறுத்து கடுமையாக திட்டியுள்ளதாகவும் கூறினார்.

தன்னை உடனே அழைத்துச் செல்லுமாறு மகள் கூறியதால் அவரை அழைத்துச் செல்ல தாம் வந்ததாகவும், அதற்குள் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கல்லூரி நிர்வாகம் கூறியதாகவும் தெரிவித்தார். 

மாணவி படித்த கல்லூரி, திருச்சி மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவனுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments