தஞ்சாவூர் உணவகத்தில் சாப்பாடு இல்லை என கூறிய ஊழியர்களை தாக்கியதாக 3 பேர் கைது

0 443

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உணவக ஊழியர்களை உணவகத்திலும், மருத்துவமனையிலும் தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று மாலை கோபிநாத் என்பவர் நடத்தி வரும் உணவகத்திற்கு வந்த ஆவிக்கரை பகுதியை சேர்ந்த சுமன், ஜெகதீஷ், வீரா ஆகியோர் உணவகத்தில் சாப்பாடு இல்லை எனக் கூறிய ஊழியர்களிடம் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது.

காயமடைந்த உணவக ஊழியர்களான அருள்பாண்டியன், குணா மற்றும் அவரது தாய் ஜீவாரத்தினம் ஆகியோர் திருவையாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அங்கும் வந்து தாக்கிய கும்பல், மருத்துவமனை ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் பொருட்களை அடித்து உடைத்ததையடுத்து போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments