இரண்டு கண்டெய்னர் லாரிகள் நேருக்கு நேராக மோதிய கோர விபத்து...

0 458

குமாரபாளையம் அருகே இரண்டு கண்டெய்னர் லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஓட்டுநர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

  சேலத்தில் இருந்து நூல் பாரம் ஏற்றிய லாரி ஒன்று கோவைக்கு சென்று கொண்டிருந்த போது, கண்டெய்னர் லாரியின் முன் சக்கரம் டயர் வெடித்தது.

இதனால் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச் சுவரைத் தாண்டி நெடுஞ்சாலையின் எதிர் திசையில் பொள்ளாச்சியில் இருந்து திருச்சிக்கு கோழிகளை ஏற்றிவந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது.

விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments