சட்டமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி தவறான தகவல்... முதலமைச்சர் மீது அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

0 257

விக்கிரவாண்டி பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ராதாபுரம் பகுதியில் பேசிய அவர், ஜாதி வாரி கணக்கெடுப்பு எப்போது எடுப்பீர்கள் என சட்டசபையில் ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு பீகாரில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக முதலமைச்சர் தவறான தகவலை கொடுத்திருப்பதாகக் கூறினார்.

செங்கல்பட்டில் நடைபெற்ற சாராய உயிரிழப்பிற்கு பிறகும் தமிழக அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றும் அன்புமணி குற்றம் சாட்டினார் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments