மெத்தனால் பேரல்களை சாக்கடையில் மறைத்து வைத்து சாராயம் தயாரிப்பு... சிபிசிஐடி விசாரணையில் தகவல்

0 427

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் இதுவரை 58க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், சாக்கடை மற்றும் விவசாய தோட்டத்தில் மெத்தனால் பேரல்களை மறைத்து வைத்து சாராய மொத்த வியாபாரிகளுக்கு விற்றது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

முக்கிய குற்றவாளியான மாதேஷ், சென்னை மற்றும் ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகளில் மெத்தனால் பேரல்களை வாங்கி கூட்டாளிகளான ஹரிமுத்து மற்றும் அய்யாசாமி மூலம் கள்ளக்குறிச்சி, தியாதுருகம் பகுதிகளில் மறைத்து வைத்து சாராயம் தயாரித்து விற்றதும் உறுதியாகி உள்ளது.

இதனிடையே மாதேஷ் மற்றும் சின்னத்துரை என்ற சாராய மொத்த வியாபாரியை காவலில் விசாரிக்க கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments