கீதாஜீவன் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு... ஆவணங்களை வழங்கும்படி தூத்துக்குடி முதன்மை நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

0 427

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக, வழக்கு தொடர்பான ஆவணங்களை கோரிய மனுதாரருக்கு அவற்றை வழங்க வேண்டும் என தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் சண்முக சுந்தரம் என்பவர் ஆவணங்களை கோரி தாக்கல் செய்த மனுவை, வழக்கில் சம்பந்தப்பட்டவராகவோ பாதிக்கப்பட்டவராகவோ மனுதாரர் இல்லை என கூறி தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, தொகுதி வாக்காளர் என்ற முறையில் அவருக்கு ஆவணங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments