ரஷ்யாவின் டகெஸ்தான் பகுதியில் கிறிஸ்தவ, யூத வழிபாட்டு தலங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்

0 346

ரஷ்யாவின் டகெஸ்தான் பகுதியில், 120 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இருவேறு வழிபாட்டு தலங்களில் ஒரே சமயத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஒரு பாதிரியார், 7 போலீசார் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.

டெர்பன்ட் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்குள்ளும், மஹச்கலா நகரில் உள்ள யூத தேவாலயத்துக்குள்ளும் ஒரே சமயத்தில் நுழைந்து சுட்ட பயங்கரவாதிகள், பின் அந்த இரு வழிபாட்டு தலங்களுக்கும் தீ வைத்தனர்.

சம்பவ இடங்களுக்கு விரைந்த போலீசாருடன் நடந்த மோதலில் 6 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

3 மாதங்களுக்கு முன், மாஸ்கோவில் இசை அரங்கிற்குள் புகுந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 145 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments