நாடாளுமன்றத்தில் மக்கள் விரும்புவது விவாதம், முழக்கமல்ல: பிரதமர் மோடி

0 381

நாடாளுமன்றத்தில் மக்கள் எதிர்பார்ப்பது விவாதங்களைத் தானே தவிர முழக்கங்களை அல்ல என்று பிரதமர் மோடி தெரிவித்தார். நாடாளுமன்ற கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூன்றாவது முறையாக வெற்றியைத் தந்துள்ள மக்களுக்கு மூன்று மடங்கு கடினமான உழைப்பைத் தருவோம் என்றார்.

நிலையான ஆட்சியே நாட்டிற்கு முக்கியம் என்பதற்காக வாக்களித்த மக்களுக்கு கடமை, செயல்திறன் மற்றும் கருணையுடன் ஆட்சி நடைபெறும் என்று கூறிய பிரதமர், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவதற்கு செயலாற்றும் கடமை அனைவருக்கும் உள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments