கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்... போலீசாருக்கும், அ.தி.மு.கவினருக்கும் இடையே வாக்குவாதம்

0 217

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பவத்தை கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்த அதிமுகவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. கோட்டை மைதானத்தில் லாரியில் நின்று சிறப்புரை ஆற்ற போலீசார் அனுமதி தராததால் அவர்கள் காவல்துறைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

செங்கல்பட்டில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேடை அமைப்பதற்கும், பேனர்கள் கட்டுவதற்கும் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் பேனர்களை ஆங்காங்கே கிடத்தி வைத்த அ.தி.மு.கவினர் மேடை இல்லாததால் லாரியில் நின்றபடி ஆர்பாட்டம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments