சிவகங்கையில் பெண் ஆய்வாளரை தகாத வார்த்தையால் திட்டியதாக பா.ஜ.க நிர்வாகி கைது

0 347

சிவகங்கை மாவட்டம் கோட்டை முனியாண்டி கோயில் அருகே, பணியிலிருந்த போக்குவரத்து சார்பு ஆய்வாளரை தாக்கியதாக பாஜக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரில் வந்த பாஜக நிர்வாகி உதயாவிடம் ஏன் சீட் பெல்ட் அணியவில்லை என போக்குவரத்து சார்பு ஆய்வாளார் அழகுராணி கேட்டதாகவும், இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தகாத வார்த்தைகளால் திட்டியதாக ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் உதயாவை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே  ஆய்வாளர் அழகுராணிக்கும்  உதயாவிற்கும் கார் நம்பர் பிளேட் குறித்த புகாரில் தகராறு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments