ஹிந்துஜா குழும குடும்பத்தினர் 4 பேருக்கு சிறை தண்டனை... வீட்டுப் பணியாளர்களை கொடுமைப்படுத்திய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

0 497

வீட்டுப் பணியாளர்களுக்கு மிக குறைந்த ஊதியம் வழங்கி, நாளொன்றுக்கு 16 மணி நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்திய வழக்கில் ஹிந்துஜா குழும குடும்பத்தினர் 4 பேருக்கு நான்கு முதல் நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்விட்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வாகன உற்பத்தி, நிதி சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில்  முன்னணியில் உள்ள ஹிந்துஜா குழுமத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் ஹிந்துஜா மற்றும் அவரது மனைவி, மகன், மருமகள் என 4 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆட்கடத்தல் வழக்கில் இருந்து நால்வரையும் நீதிமன்றம் விடுவித்துள்ள நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக ஹிந்துஜா குழுமம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments