காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கனடா அரசுக்கு இந்தியா வலியுறுத்தல்

0 401

காலிஸ்தான் ஆதரவாளர் நிஜ்ஜார் கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவையொட்டி கனடா நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டதற்கு இந்தியா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பயங்கரவாதத்திற்கு இடம் தர வேண்டாம் என்றும் கனடா அரசிடம் வலியுறுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

காலிஸ்தான் பிரிவினைவாதம் தீவிரமான பிரச்சினை என்றும், காலிஸ்தான் அமைப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments