தூத்துக்குடியில் ஆம்னி பேருந்துகள் சோதனை- 2 பேருந்துகள் பறிமுதல்... நடுரோட்டில் தவித்த 58 பயணிகள்

0 375

தூத்துக்குடியில் இருந்து அனுமதி இல்லாமல் பெங்களூருக்கு இயக்கப்பட்ட இரண்டு ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வெளிமாநில பதிவுஎண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழகப் பதிவெண்ணுக்கு மாற்றுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், தூத்துக்குடியில் 20க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் சோதனை செய்யப்பட்டன.

2 பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்ததால், நடுரோட்டில் தவித்த 58 பயணிகளுக்கு அரசுப்  போக்குவரத்து கழகம் மூலம் பெங்களூர் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments