சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்க்க ஐ.என்.எஸ். பருந்து கடற்படைத் தளம் வந்த பாதுகாப்பு இணை அமைச்சர்

0 283

தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சீத், சிறிய ராணுவ விமானத்தில் உச்சிப்புளி ஐ.என்.எஸ். பருந்து கடற்படை தளத்திற்கு வந்தார்.

பின்னர், ஹோவர்கிராப்ட் ரோந்து கப்பலில் சென்று ராமேஸ்வரம் கடல் பகுதியை அவர் ஆய்வு செய்தார்.

சாலை மார்க்கமாக மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை முகாமிற்கு சென்ற சஞ்சய் சீத், அங்கு சோதனை செய்ததோடு, கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்களையும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments