கொள்ளையடித்த பணத்தில் ஸ்பின்னிங் மில் வாங்கிய கொள்ளையன்... தாய், மனைவி உள்பட 6 பேர் கைது

0 559

கொள்ளையில் ஈடுபட்ட பணத்தைக் கொண்டு 4 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்பின்னிங் மில்லை விலைக்கு வாங்கிய நபரை ராஜபாளையம் போலீஸார் தேடி வருகின்றனர்.

தெற்கு ஆண்டாள்புரத்தில் 56 சவரன் நகை கொள்ளை போன வழக்கில் 2 பேரிடம் விசாரணை நடத்திய போலீஸாருக்கு இந்த கொள்ளை சம்பவத்திற்கு பெரியகுளத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவன் மூளையாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

அதனையடுத்து மூர்த்தியின் தாய் மற்றும் மனைவி உள்பட 6 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 150 சவரன் நகை, இரண்டரை லட்சம் ரூபாய் ரொக்கம், 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்ததோடு, தலைமறைவான மூர்த்தியை தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments