ஆட்டோ ரேஸ் நடத்திய போது 2 பேர் உயிரிழந்த சம்பவத்தில் போட்டி நடத்திய 7 பேர் கைது; ஆட்டோக்கள், பைக்குகள் பறிமுதல்

0 359

வண்டலூர்- மீஞ்சூர் வெளி வட்ட சாலையில் சில தினங்களுக்கு முன்பு ஆட்டோ ரேஸ் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக 7 பேரை கைது செய்துள்ள தனிப்படை போலீசார் அவர்களின் 2 ஆட்டோக்கள் மற்றும் 2 பைக்குகளை பறிமுதல் செய்து மேலும் 30 பேரை தேடி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பைக் ரேஸ் மற்றும் பந்தயம் கட்டி ஆட்டோ போட்டிகள் நடத்தும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று ஆவடி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments