ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை : சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வாழ்த்துகளை பரிமாறிய இஸ்லாமியர்கள்

0 251

ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

கோயம்புத்தூர் கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிய பள்ளி வளாகத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் கூடி சிறப்பு தொழுகை நடத்தினர்.

பக்ரீத் பண்டிகையையொட்டி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆண்கள் மற்றும் பெண்கள் என திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

திருப்பூரில் நொய்யல் வீதியில் உள்ள பள்ளியில் இஸ்லாமியர்கள் திரளானோர் பங்கேற்று பக்ரீத் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வளையாம்பட்டு பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு கூட்டுத் தொழுகை நடைபெற்றது.

தருமபுரியில் ராமக்கா ஏரி அருகே உள்ள தொழுகை மைதானத்தில் திரளான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி, ஒருவரை ஒருவர் கட்டியணைத்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments