படகு கவிழ்ந்து கடலில் 15 மணி நேரம் தத்தளித்த மீனவர்கள்...

0 232

நாகை மாவட்டம், புஷ்பவனம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ரவி, ரகுபதி, ஜெயபால் ஆகிய மூன்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பாததால், அவர்களை மீனவர்கள் தேடிச் சென்றபோது, ஓட்டை விழுந்து படகு கவிழ்ந்த நிலையில் ஐஸ் பெட்டியை பிடித்து மூவரும் மிதந்துகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அவர்களை மீனவர்கள் மீட்டு படகையும் கரைக்கு இழுத்து வந்தனர்.

15 மணி நேரம் கடல் நீரில் மிதந்துகொண்டிருந்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்ட மூன்று மீனவர்களும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments