200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம் என்ற முதலமைச்சரின் கனவு பலிக்காது - இ.பி.எஸ்

0 337

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது என்பதால் தான் அ.தி.மு.க. புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின் பேட்டியளித்த அவர், விக்கிரவாண்டியில் பூத் வாரியாக பிரித்து அமைச்சர்கள் பணமழை பொழிவார்கள் என்று கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலின்போது விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. 6,000 வாக்குகளே குறைவாக பெற்றதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதேபோல், அருப்புக்கோட்டை, திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி அதிக வாக்குகளை பெற்றதாகவும் அவர் கூறினார். 2026 சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறுவோம் என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு பலிக்காது என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments